states

மணிப்பூரில் மேலும் மேலும் இளம்பெண்கள் குறிவைத்து நடத்தப்பட்ட கும்பல் வல்லுறவுக் குற்றங்கள்

இம்பால், ஜூலை 23- ஜூலை 19 அன்று வெளியான வீடியோக்களோடு பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்   கொடுமைகள் முடிந்துவிட வில்லை. இதேபோன்று மேலும் பல கும்பல் வல்லுறவுச் சம்பவங்கள்  நடந்திருப்பது, தற்போது ஒவ் வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து  கொண்டிருக்கின்றன. தங்கள் மக்கள் சந்தித்த இழப்பு கள் குறித்து, குக்கி பழங்குடி சமூ கத்தை சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள், ஊடகங்களுக்கு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், “கடந்த மூன்று மாதங்களில் நடந்த  வன்முறையில் எங்கள் சமூகத்தைச்  சேர்ந்த 114 பேர் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். அதேபோல வீடியோ வில் இருந்த பெண்களை தவிர்த்து, மேலும் இரண்டு பெண்கள் இம்பா லில் கும்பல் பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டு கொலை செய்யப்பட் டுள்ளனர். லாங்கோல், நகாரியன் பகுதியில் நர்சிங் மாணவிகள் பாலி யல் வன்கொடுமை செய்யப்பட்டு  அடித்துக் கொலை செய்யப்பட்ட னர். இம்பாலில் தாய் – மகன்  எரித்துக் கொலை செய்யப்பட்ட னர். இம்பால் மைய பகுதியில் மன நலம் குன்றிய குக்கி இனப் பெண்  கொடூரமாக கொலை செய்யப்பட் டார். எனவே இந்தச் சம்பவங்கள் குறித்த விரிவான விசாரணை நடத்த இந்த வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.  இவை தொடர்பாக மேலும் பல  சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளி யாகி மேலும், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

முறையே, 20 மற்றும் 40 வயது டைய 2 பழங்குடியின பெண்கள்  நிர்வாணமாக இழுத்துச் செல்லப்  பட்டு, கும்பல் வல்லறவுக்கு உள ளாக்கப்பட்ட அதே நாளிலேயே, காங்போக்பி மாவட்டத்தை சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய மேலும் 2 பெண்கள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். இவர்  கள் தலைநகர் இம்பாலில் வாடகை  வீட்டில் ஒன்றாகத் தங்கி அருகில் கொனுங் மாமாங் பகுதியில் உள்ள கார் சுத்தம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். மே 5  அன்று மாலை இந்தப் பெண்களில்  ஒருவரின் தாய், தனது மகளின் செல்போனில் தொடர்பு கொண்  டுள்ளார். அப்போது போனில் மணிப்  பூரி மொழியில் பேசிய வேறொரு பெண் மிரட்டி போனை துண்டித்துள்  ளார். அதன்பின் உறவினர் மூல மாகத்தான் அந்த தாய்க்கு தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் தெரிய வந்துள்ளது. 

சம்பவத்தன்று ஆண், பெண்கள் அடங்கிய கும்பல் ஒன்று 2 இளம்  பெண்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு  வந்துள்ளது. குக்கி இனத்தைச்  சேர்ந்த பெண்கள் எங்கிருக்கிறார் கள் என அப்பகுதியினரிடம் விசா ரித்து, 2 பெண்களையும் தரதரவென  இழுத்துச் சென்றுள்ளனர். அங் குள்ள தொழிற்சாலைக்குள் பெண்  களை அழைத்துச் சென்ற கும்பல்  கதவை மூடி, அவர்களை நிர்வாண மாக்கி கும்பல் வல்லுறவுக்கு உள்  ளாக்கியுள்ளனர். அந்த பெண்கள்  சத்தம் போடக் கூடாது என்று  வாயைத் துணிகளால் அடைத் துள்ளனர். சுமார் மூன்றரை மணி  நேர கொடூரத்திற்குப் பிறகு, அந்த  இளம்பெண்கள் உயிரற்ற உடல் களாக வெளியே வீசப்பட்டுள்ள னர். அவர்களின் ஆடைகள் கிழிந்தும், தலைமுடி கொடூரமாகப் பிடுங்கப்பட்டும், உடல் முழுவதும் ரத்த வெள்ளமாய் காட்சியளித்துள் ளது. பின்னர் அவர்களை கொடூர மாகத் தாக்கியும் எரித்தும் படு கொலை செய்துள்ளனர். இங்கு நடந்த கொடூரத்தை கடையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஊடகத்திடம் தெரி வித்துள்ளார்.

இங்கு கும்பல் வல்லு றவில் ஈடுபடுமாறு மெய்டெய் ஆண்  களை, அந்த சமூகத்து பெண்களே தூண்டிவிட்டதாக மற்றொரு அதிர்ச்சித் தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்திலும், பாதிக்கப்  பட்ட பெண்ணின் தாய், கடந்த மே  16 அன்று சைகுல் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். அடை யாளம் தெரியாத சுமார் 100 முதல் 200 பேர் கொண்ட கும்பல் தன் மக ளையும் மற்றொரு பெண்ணையும் நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து கும்பல் வல்லுறவு செய்து எரித்துக் கொன்றதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த புகாரை கடந்த  ஜூன் 13 அன்றுதான் இம்பாலின்  போரோம்பட் காவல் நிலையத் திற்கு போலீசார் மாற்றியுள்ளனர். ஆனாலும் ஒருவரைக் கூட கைது  செய்யவில்லை. இந்த கொடூரம்  குறித்து, இரண்டு சமூக ஆர்வலர்  கள், தேசிய மனித உரிமை ஆணை யத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனாலும், போலீஸ் டிஜிபி ராஜிவ்  சிங் உட்பட எந்த போலீஸ் உயர்  அதிகாரிகளும் இதுதொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வில்லை. எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்களின் புகைப்படத்தை மட்டுமே போலீசார் அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பி அடை யாளத்தை உறுதி செய்துள்ளனர். 2 பெண்களின் சடலம் எங்குள்ளது, அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை என்னவானது என்பது பற்றி கொல்லப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு எந்த தகவலும் தெரியவிக்கப்படவில்லை. இதை யெல்லாம் விட கொடுமை என்ன வென்றால், முதல் தகவல் அறிக்கை யில், கும்பல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டு எதுவும் இல்லை.

விடுதலைப் போராட்ட வீரரின் 80 வயது மனைவி உயிரோடு எரித்துக் கொலை!

இம்பால், ஜூலை 23- மணிப்பூர் வன்முறையில், ஓய்வுபெற்ற ராணுவ  வீரரின் மனைவி கும்பல் வல்லுறவுக்கு உள்ளாப்பட்ட தைப் போல, நாட்டின் விடுதலைக்காகப் போரா டிய தியாகியின் 80 வயது மனைவியும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். காக்சிங் மாவட்டத்தின் செரோவ் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ். சூரசந்த் சிங். விடுதலைப் போராட்ட  தியாகி ஆவார். இவரது தியாகத்தைப் பாராட்டி குடி யரசு முன்னாள் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் கவு ரவித்தும் உள்ளார். சூரசந்த் சிங் காலமாகி விட்ட நிலையில், அவரது மனைவி இபெடோம்பி தனது குடும்பத்தினருடன் செரோவ் கிராமத்திலேயே வசித்து வந்தார். அவருக்கு வயது 80. இந்நிலை யில்தான், ஆளும் பாஜக அரசு தூண்டிவிட்ட வன்  முறையின் ஒருபகுதியாக, வன்முறைக் கும்பல் ஒன்று  மே 28 அன்று அதிகாலை 2 மணியளவில் இபெடோம்  பியை வீட்டிற்குள் பூட்டி தீவைத்துள்ளது. இதில் 80 வயது இபெடோம்பி எரிந்து சாம்பலாகிப் போயி ருக்கிறார். காப்பாற்ற வந்த அவரது பேரன் பிரேம் காந்தா மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவ ரது கை மற்றும் தொடையில் குண்டுகள் பாய் ந்துள்ளன. முன்னதாக வயதான தன்னை தாக்கமாட்டார் கள், அதனால் நான் வீட்டையும், உடைமைகளையும் பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் எப்படியாவது தப்பித்து விடுங்கள் என்று கூறி, மூதாட்டி இபெ டோம்பி, தனது குடும்பத்தினரை அனுப்பி வைத்தார்.  ஆனால், வன்முறைக் கும்பல் மூதாட்டி என்றும் பார்க்காமல் வீட்டைப் பூட்டி உயிரோடு தீ வைத்து எரித்துச் சென்றுள்ளது.